வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
கோயில்களில் வழிபாட்டுக்குத் தடை
கரோனா பரவல் அச்சம் காரணமாக இன்று ஆடி பூரம் தினத்தன்று, அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய கைத்தறி தினம்
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சிக் குழுமம் மெய்நிகர் நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்த ஐந்து நாள் இந்திய துணி வகைகள் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை விண்ணில் செலுத்தப்படும். அதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது.
மழை நிலவரம்
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பெய்யக்கூடும்.