தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2020, 12:33 PM IST

ETV Bharat / state

தனியார் கல்லூரியைத் தேர்ந்தெடுத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம்

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த புதிய திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது.

New schemes for govt school students have chosen private medical college
New schemes for govt school students have chosen private medical college

சென்னை:அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு புதிய திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி , ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு இதில் சிரமம் ஏற்படக்கூடும்.

எனவே மாணவர்கள் மருத்துவப் படிப்பை கைவிடக் கூடாது என்பதற்காக அரசு தற்போது புதிய நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அரசு ஒதுக்கீட்டில் உள்ள 405 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 239 பேர் மாணவர்கள் சேர உள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 166 இடங்கள் உள்ளன. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த முடியாது என்பதால் சிறப்பு திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது.

அதன்படி, மாணவர்களுக்கு கல்விக் கடன், உதவித் தொகை மற்றும் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு தொகையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாணவர்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்தபிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details