தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூர் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jul 23, 2019, 11:46 PM IST

Mylapore Girl Guard commits suicide

சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டம் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றுபவர் உமா லட்சுமி(42). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் குடும்ப பிரsனை காரணமாக தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

இன்று அலுவலக பணி முடிந்து வீட்டிற்கு சென்ற உமா லட்சுமி உடை மாற்றி வருவதாகக் கூறி அறைக்குள் சென்று கதவை அடைத்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டியுள்ளனர்.

இருந்தபோதும் கதவு திறக்கப்படாததால் அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உமா லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டினப்பாக்கம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details