தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 19, 2020, 2:20 PM IST

Updated : Aug 19, 2020, 2:43 PM IST

ETV Bharat / state

முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை : கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
எடப்பாடி பழனிசாமி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

உடுமலைப்பேட்டையில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 15ஆம் தேதி தனது சுதந்திர நாள் உரையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஆக. 18) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் இந்த அறிவிப்பிற்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

முன்னதாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியாவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இந்நிகழ்வின்போது தலைமைச் செயலர் கே. சண்முகம் உடன் இருந்தார்.

இதையும் படிங்க :விநாயகர் சதுர்த்தி... மீறினால் நடவடிக்கை! - அரசு மீது நீதிமன்றம் நம்பிக்கை

Last Updated : Aug 19, 2020, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details