தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 1, 2023, 8:03 AM IST

ETV Bharat / state

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி

சென்னையில் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி
தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XIX Chennai District Masters Athletic Championship 2022" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இப்போட்டியை சென்னை மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் எம்.செண்பகமூர்த்தி, செயலாளர் ருக்மணி, பொருளாளர் சசிகலா, மூத்த துணைத் தலைவர்கள் கலைச்செல்வன், சாலமன் மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது.

இந்த போட்டியின் முதல் நாளில் (டிசம்பர் 30, 2022) திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி, திரைப்பட நடிகர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தொழிலதிபர் சூர்யபிரகாஷ் போன்றவர்கள் கலந்து கொண்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

இந்த போட்டியின் இரண்டாம் நாளில் (டிசம்பர் 31, 2022), தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், கார்த்திகேயன் IAS (Member Secretary, SDAT), திரைப்பட தயாரிப்பாளர் G.K.ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியை தொடங்கி வைத்து, நீண்ட நேரம் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து பேசினார். 60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் எம்.செண்பகமூர்த்தி 13.8 நொடிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்.

இரண்டு நாட்களாக நடந்த இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஒட்டப்பந்தயம், தாண்டுதல், எறிதல் போன்ற பலவகை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் ஓசுரில் வரும் ஜனவரி 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:New year 2023: புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்

ABOUT THE AUTHOR

...view details