மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா சாத்தங்குடி பகுதியில் வேலை இழந்து தவித்து வரும் 700 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறி தொகுப்பினை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். அரசு அறிவித்துள்ள தகுந்த இடைவெளி விடப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருப்பிடத்திற்கே சென்று அரிசி, காய்கறிகள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இதன் பின்னர் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் பேசியதாவது, "ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் ரூ. 2000 வழங்கி இருந்தாலும் தற்போது ஆட்டோ ஓட்டுவதற்கான அனுமதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்த உலகில் எதை வேண்டுமானாலும் மீட்டெடுக்கலாம், ஆனால் உயிரை கடவுள் நினைத்தாலும் மீட்டெடுக்க முடியாது. அதனால்தான் உயிரை காப்பாற்றுகின்ற கடமைக்கும், உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தாலும், மக்களின் உயிரை 100 விழுக்காடு காப்பாற்றிய பின் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான வழிகளை செய்வோம். கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு நான்கு முறை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.