சினேகம் அறக்கட்டளை யாருடையது என கவிஞர் சினேகனும், பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமியும் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜெயலட்சுமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சினேகன் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் நான் மோசடி செய்ததாக ஆதாரமற்ற புகார் அளித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் எனது தரப்பு விளக்கங்களை விசாரணை அதிகாரியிடம் அளித்துள்ளேன். ஆனால் சினேகன் புகார் அளித்து விட்டு அதற்குண்டான ஆதாரங்களை இதுவரை சமர்பிக்க வில்லை. மாறாக நான் அளித்து 20 நாட்களான நிலையில் என் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் சினேகனுடன் சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்துவதாக அவர் கூறினார்.