தமிழ்நாடு

tamil nadu

கனமழை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி இன்று விடுமுறை

By

Published : Dec 31, 2021, 7:02 AM IST

Updated : Dec 31, 2021, 7:13 AM IST

கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக இன்று (டிசம்பர் 31) சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நான்கு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை
நான்கு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (டிசம்பர் 30) மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. திடீரென பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை விட பல மடங்கு மழை பெய்ததால் வாகனப் போக்குவரத்து, சுரங்கப் பாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி, மற்றும அரசு அலுவலகங்களுக்கு இன்று (டிசம்பர் 31) விடுமுறை அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சென்னையில் கொட்டித்தீர்த்த மழை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு

Last Updated : Dec 31, 2021, 7:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details