தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 13, 2019, 8:52 PM IST

Updated : Dec 13, 2019, 9:05 PM IST

ETV Bharat / state

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் தோல் வங்கி! - ஒரு சிறப்புப் பார்வை!

சென்னை: இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோலைப் பயன்படுத்தி தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்தார்.

kmc-medical-college-skin-bank
kmc-medical-college-skin-bank

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தோல் வங்கிக்குத் தேவையான தோலினை இறந்தவரின் உடலிலிருந்து பெறுகின்றனர். அதே போல் பல்வேறு பதப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த தோலைத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைக்கு ஐந்து ஆண்டுகள் வரைப் பயன்படுத்த முடியும்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

இதுகுறித்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறும்போது, 'கண் தானம் அளிக்கும் அனைவரும் தோலையும் தானமாக அளிக்க முடியும். அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இறந்தவர்கள் குறித்து விபரம் தெரிவித்தாலும், நாங்களே நேரில் வந்து தோலைப் பெற்றுக் கொள்வோம். கடந்த 2018ஆம் ஆண்டில் எட்டு பேர் தோல் தானம் அளித்தனர்.

அதனை தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட எட்டு பேருக்கு பயன்படுத்தி உள்ளோம். 2019ஆம் ஆண்டில் இதுவரை 14 நபர்கள் தோலை தானமாக அளித்துள்ளனர். அவற்றில் எட்டு நபர்களின் தோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆறு நபர்களின் தோல்கள் பதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சுமார் பத்து நபர்கள் வருகின்றனர்.

தோல் வங்கி குறித்து கூறும் கல்லூரி முதல்வர் வசந்தாமணி

ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அளவு தோல் தானமாகக் கிடைக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களில் உள்ள தோலினை தானமாக அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்புப் பிரிவு உதவி பேராசிரியர் பிரசன்னா கூறும்போது, 'தீ விபத்துகளால் பாதிக்கப்படும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்காயம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு காயம் ஏற்பட்ட பகுதியில், வேறு தோலை பொருத்தி சிகிச்சை அளிப்போம். அவ்வாறு சிகிச்சை அளிப்பதால் நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் விரைவில் குணமடைவார்கள்.

தோல் வங்கி குறித்து கூறும் உதவிப் பேராசிரியர் பிரசன்னா

இறந்தவரின் உடலிலிருந்து தோலைத் தானமாக அளிப்பதால், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவ முடியும். தோல் கொடுப்பான் தோழன் எனக் கூறுவார்கள். அதுபோல் இறந்தவரின் உடலில் உள்ள தோலில் 10 விழுக்காட்டினை அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:

சிதம்பரத்தைக் கைது செய்க' - காமராஜரோடு தன்னை ஒப்பிட்டுப் பேசியதால் புகார்

Last Updated : Dec 13, 2019, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details