தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 13, 2019, 8:41 PM IST

ETV Bharat / state

விண்ணில் பாயவிருக்கும் ரிசாட் - 2 பி செயற்கைகோள்

சென்னை: பிஎஸ்எல்வி சி - 46 ராக்கெட் மூலம் ரிசாட் - 2 பி என்ற செயற்கைக்கோளை மே 22ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் புதிதாக ரிசாட் - 2பி எனப்படும் செயற்கைக்கோளை மே 22ஆம் தேதி காலை 5:27 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த ரிசாட் - 2பி செயற்கைக்கோள் 555 கி.மீ தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தபட உள்ளது. ரேடார் மூலம் பூமியை கண்காணிக்கும் இந்த செயற்கைக்கோள் எல்லை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி - சி 46 ராக்கெட்டில் உந்து மோட்டார்கள் பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் காண்பதற்கு பார்வையாளர் மாட (கேலரி) வசதி செய்து தரபட்டிருந்தது. அதேபோல், இம்முறையும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஐந்து நாட்களுக்கு முன்பாகத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details