சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அபினேஷ்வர் ராவ். இவர்கள் இருவரும் நேற்று மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் மாஞ்சா நூல் ஒன்று சிறுவனின் கழுத்தில் சிக்கியது. இதில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவன் ரத்தவெள்ளத்தில் துடித்துள்ளார். உடனடியாக அவனுடைய தந்தை கோபால் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். இது குறித்து ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.