தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 3, 2019, 7:31 AM IST

ETV Bharat / state

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் கைது

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

cannabis
cannabis

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதையடுத்து சப்ளை செய்பவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற கோட்டூர்புரம் காவல்துறையினரின் வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிடித்து சோதனை செய்ததில் 15 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

பின்னர் நான்கு பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மேற்கு திரிபுராவைச் சேர்ந்த குர்ஷத் மியா (28), பிலால் உசைன் (30), அன்வர் உசைன் (22), இமான் உசைன் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் தனியார் லாட்ஜில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களை கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details