தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2019, 7:05 PM IST

ETV Bharat / state

'சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்பதே தனது வேண்டுகோள்' - அப்துல் லத்தீஃப்

சென்னை: தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதியை நேரில் சந்தித்து, தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டி புகார் மனு அளித்துள்ளார்.

IIT Girl Suicide

சென்னை ஐ.ஐ.டியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப். இவர், கடந்த நவம்பர் 8ஆம் தேதி, தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். பேராசிரியர்கள் சிலர் அளித்த மத ரீதியான துன்புறுத்தலால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாக ஃபாத்திமா, தன் செல்ஃபோனில் குறிப்பு எழுதி வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைக்கோரி காவல்துறை இயக்குநர் திரிபாதியை மாணவி ஃபாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் நேரில் சந்தித்து புகாரளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' தனது மகள் ஃபாத்திமா திறமையான மாணவி, ஐ.ஐ.டி நுழைவுத் தேர்விலும் முதலிடம் பிடித்தே அங்கு படிக்கச் சென்றார். ஆகையால், குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு குன்றிய மனநிலை அவருக்கு இல்லை.

மேலும், எனது மகள் அலைபேசியில் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மரணத்திற்குக் காரணமான, சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சுதர்சன் பத்மநாபன் மட்டுமல்லாமல் மேலும் பல ஐ.ஐ.டி நிர்வாகிகளும் எனது மகளின் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எனது மகள் பதிவுசெய்து வைத்துள்ள விரிவான வாக்குமூலத்தையும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரிடம் வழங்கியுள்ளேன்.

இத்தனை திறமைகள் நிறைந்த ஒரு மாணவி இறந்த பின்பும் ஐ.ஐ.டி நிர்வாகமோ, அதன் நிர்வாகிகளோ தனக்கும் தனது மனைவிக்கும் அனுதாபத்திற்குக்கூட, ஆறுதலாக ஒரு வார்த்தை பேசவில்லை.

சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்பதே தனது வேண்டுகோள்-அப்துல் லத்தீஃப்

தனது மகள் அலைபேசியில் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மரணத்திற்குக் காரணமான சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதே தனது முதல் வேண்டுகோள் எனத் தெரிவித்தார்.
மேலும், எனக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மீதும், தமிழ்நாடு முதலமைச்சர் மீதும் அதீத நம்பிக்கை உள்ளதால் அவர்கள், குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள்' என எதிர்பார்ப்பதாக ஃபாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details