தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2020, 6:49 PM IST

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-pm
etv-bharat-top10-news-7-pm

சீன எல்லையில் பதற்றம் - ஆலோனை மேற்கொள்ளும் இந்திய ராணுவத் தளபதிகள்

டெல்லி: இந்திய - சீன எல்லைப்பகுதியில் ராணுவத்தினரிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவத் தளபதிகள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

தமிழ்நாட்டில் மேலும் 646 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 646 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஊரடங்கில் மேலும் தளர்வு: 75 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்?

சென்னை: அடுத்தக் கட்ட தளர்வாக 75 விழுக்காடு அரசு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய கோத்ரா குற்றவாளி!

டெல்லி: 2002ஆம் நடைபெற்ற கோத்ரா கலவரத்தின் குற்றவாளி, தனக்கு மருத்துவ அடிப்படையில் ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

200 நகரங்களில் தனது சேவையைத் தொடங்கிய ஜியோமார்ட்

ஜியோமார்ட் தனது சேவையை 200 நகரங்களில் தொடங்கியுள்ளதாக ரிலையன்ஸ் சில்லறை விற்பனையாளர் வணிகத்தின் தலைமை நிர்வாக அலுவலர் தாமோதர் மால் தெரிவித்துள்ளார்.

ஆச்சி என்னும் திரையுலக ஆளுமை!

தமிழ் சினிமா ரசிகர்களைத் தனது நடிப்பால் கட்டிப்போட்ட வெகு சில நடிகைகளில் முக்கியமானவர் ஆச்சி மனோரமா. இன்று அவரது பிறந்தநாள். அவர் நடிப்பாற்றல் பற்றிய சிறு தொகுப்பு...

யார் சிறந்த பேட்ஸ்மேன்: விராட் - ஸ்மித்; பிரெட் லீ பதில்...!

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ பதிலளித்துள்ளார்.

ஒரே மாதத்தில் நான்கு லட்சம் சைபர் தாக்குதல்கள்!

கோவிட்-19 தொற்று காரணமாக மக்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப் பயன்படுத்தி ஒரே மாதத்தில் நான்கு லட்சம் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன.

விதிகளை திரும்பப் பெற்றால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள விதிகளை உடனடியாக திரும்பப்பெற்றால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்க - ஈரான் மோதல்

தெஹ்ரான்: அமெரிக்காவின் பொருளாதார தடையையும் பொருட்படுத்தாமல் ஈரான் எண்ணெய் கப்பல்கள் வெனிசுலா பகுதிக்குள் நுழைந்தது இரு நாடுகளிடையே மீண்டும் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details