தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 2, 2020, 2:48 PM IST

ETV Bharat / state

பொறியியல் கலந்தாய்வு: ஆன்லைன் பதிவு விரைவில் தொடங்கும்!

சென்னை: பொறியியல் படிப்புக்கான சேர்க்கையை ஆன்லைனில் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவை விரைவில் தொடங்குவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் முடிவுசெய்தது. கரோனா பெருந்தொற்று காரணமாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை நேரில் நடத்தாமல் அதையும் இணையத்தின் வாயிலாக நடத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் (இணையம் வாயிலாக) பதிவைத் தொடங்குவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தயாராகிவருகிறது. இது குறித்த அறிவிப்பு 10 நாள்களுக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.

பதிவுசெய்ய கால அவகாசம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு மேற்கொள்ள 40 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் வரையில் நடைபெறுவதால், அவர்களுக்கென்று தனியாக நான்கு நாள்கள் அவகாசம் வழங்கப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணி

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் உயர் கல்வித் துறை அமைக்கும் உதவி மையங்களில் நேரில் நடத்தப்படும். இந்தாண்டு கரோனா பாதிப்பு காரணமாக, மாணவர்களை நேரில் அழைக்காமல், ஆன்லைன் வழியில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை முடிப்பதற்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் முடிவுசெய்துள்ளது.

மாணவர்கள், சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தபின் ஆன்லைன் வழியில் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் .

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 1.75 லட்சம் இடங்கள் இருக்கின்றன. கடந்தாண்டு 1.40 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டும் அதே அளவிற்கு விண்ணப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தயார்!

ABOUT THE AUTHOR

...view details