தமிழ்நாடு

tamil nadu

எழும்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் உயிரிழப்பு

By

Published : Jan 22, 2021, 11:32 AM IST

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் இருந்து கீழே குதித்து முதியவர் உயிரிழந்தார்.

முதியவர் உயிரிழப்பு
முதியவர் உயிரிழப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் கவுன்ட்டர் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டட மாடியின் மீது முதியவர் ஒருவர் வேகமாக ஏற முயன்றார்.

இதைப் பார்த்த பயணிகள் அவரிடம் செல்லக்கூடாது என சத்தமிட்டனர். இருப்பினும் முதியவர் கட்டடத்தின் மீது ஏறினார். உடனே எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு பயணிகள் தகவல் கொடுத்தனர்.

திடீரென்று முதியவர் கட்டடத்திலிருந்து கீழே குதித்தார். இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை சோதனை செய்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் சென்று உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது உயிரிழந்த முதியவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறில் விஷம் குடித்தத் தம்பதியர்- இளம்பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details