தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 13, 2020, 8:18 AM IST

ETV Bharat / state

பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்

சென்னை: ஐபிஎஸ் அலுவலர் குறித்து அவரது மனைவி பொய்ப் புகார் அளித்துள்ளதாக அவரின் தந்தை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

dindigul ips officer father complaint against its daughter inlaw to chennai police commissioner
ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த்தின் தந்தை ராஜகுரு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராஜகுரு என்பவரின் மகன் ஆனந்த். இவர் யு.பி.எஸ்.சி. தேர்வெழுதும் பயிற்சி மையத்தில் பயின்றபோது, அருணா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

ஆனந்த் 2016ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராகத் தேர்ச்சிபெற்று தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். ஆனந்த், அருணாவிற்கு 2017ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அருணா, ஆனந்த் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அருணா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, திருமணத்துக்காகப் பெண் வீட்டார் தரப்பில் சுமார் 500 சவரன் நகையுடன், சுமார் நான்கு கோடி ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக அருணா பொய்யான தகவலைக் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும் செய்தித்தாள்கள், ஊடகங்களில் இதுகுறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த்தின் தந்தை ராஜகுரு சென்னையில் உள்ள காவல் ஆணையரைச் சந்தித்துப் புகாரளித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருணாவின் வீட்டார் வரதட்சணை கேட்டபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டோம். அது தொடர்பான செல்போன் பதிவு ஆதாரங்களைத் தேனாம்பேட்டை காவல் துறையினரிடம் அளித்துள்ளோம்.

திருமணத்திற்கு முன்பு, பெண் வீட்டார் தனது மகளுக்காகச் செய்து வைத்திருந்த நகைகளை வருமானவரித் துறை அலுவலர்கள் வரி செலுத்ததால் எடுத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். வருமானவரித் துறையினரிடம் எனது மகனைப் பேசச் சொல்லிக் கூறினர். ஆனால் நாங்கள் பேச மறுத்துவிட்டு திருமணத்துக்கு இருக்கின்ற நகையைப் போட்டு வருமாறு தெரிவித்தோம்.

ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த்தின் தந்தை ராஜகுரு பேட்டி

அதையடுத்து அருணா எந்த விதமான நகையையும் அணிந்து வரவில்லை. நாங்கள் வரதட்சணை கேட்டது என்பது பொய். திருமணத்திற்குப் பின் எனது மகனைச் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தினார்.

இது தொடர்பாக எல்லா விதமான ஆதாரத்தையும் நீதிமன்றத்திலும் காவல் நிலையத்திலும் சமர்ப்பித்துள்ளதும். மேலும் தனது மகன் மீது பொய்யான புகார் அளித்துவரும் அருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:அடையாளம் தெரியாத பெண்ணுக்கு இறுதிச் சடங்கு நடத்திய உ.பி. போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details