தமிழ்நாடு

tamil nadu

இது என்னய்யா புது புரளியா இருக்கு... கிஃப்ட் பார்சல் மூலம் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை!

By

Published : Jul 24, 2023, 3:45 PM IST

Updated : Jul 24, 2023, 5:54 PM IST

சென்னையில் மோசடி கும்பல் ஒன்று, பொதுமக்களிடம் சமூக வலைதளங்களில் மூலம் பேசி, பின்னர் கிப்ட் பார்சல் அனுப்பி, நூதன முறையில் பண மேசாடி செய்து வருகிறது. இது போன்ற மோசடி குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சபர் கிரைம் எச்சரித்துள்ளது.

சைபர் மோசடி கும்பல்
cyber crime

சென்னை: சைபர் மோசடி கும்பல் புதுபுது முறைகளில் பொதுமக்களை ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் இருப்பது போல சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் நட்பாகப் பழகி, பின்னர் கிஃப்ட் பார்சல் அனுப்பி இருப்பதாக கூறுகின்றனர்.

பின்னர் சுங்கவரித்துறையில் இருந்து கால் செய்வதாக சம்மந்தப்பட்ட நபரிடம் பேசி, கிஃப்ட் பார்சலில் சட்டவிரோத கரன்சிகள் இருப்பதாகவும் உடனடியாக சுங்க வரித்தொகையை செலுத்த வேண்டும், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நைஜீரிய கும்பலை கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த மோசடியை மேலும் மெருகேற்றி தற்போது நூதன முறையில் சைபர் மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர் 50 லட்ச ரூபாய் வரை மோசடியில் சிக்கி இழந்துள்ளதாக, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.

குறிப்பாக மும்பையிலிருந்து சுங்கவரித்துறை அதிகாரிகள் பேசுவது போல பொதுமக்களைத் தொடர்பு கொண்டு, உங்களுக்கு மலேசியாவில் இருந்து பிரபல கொரியர் மூலமாக பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அந்த பார்சலில் சட்டவிரோதமான போதைப்பொருட்கள் மற்றும் புலித்தோல் இருப்பதாகவும் கூறி பயமுறுத்துகின்றனர். பின்னர் இதற்கான அபராதத் தொகையை உடனடியாக செலுத்தவில்லையென்றால் மும்பை போலீசார் 10 நிமிடங்களில் கைது செய்வார்கள் எனக் கூறுகின்றனர்.

இதையடுத்து, ஸ்கைப் வீடியோ காலில் மும்பை போலீசாரின் காக்கி உடையில் காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பது போல தோன்றி, ஏற்கனவே இது போன்று ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது புகைப்படத்தையும் காண்பிக்கின்றனர். போனை துண்டிக்காமல் தாங்கள் கூறும் ஜீபே மற்றும் வங்கிக் கணக்கிற்கு பணத்தைச் செலுத்துமாறு அந்த சைபர் கிரைம் மோசடி கும்பல் பொதுமக்களிடம் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடியில் சிக்கி அடையாறை சேர்ந்த இளம்பெண் 19 லட்சம் ரூபாய் மற்றும் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் 18 லட்சம் ரூபாய் என தொடர்ச்சியாக பொதுமக்கள் 50 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக 1930 எண் மூலம் காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ரேண்டம் முறையில் மோசடி கும்பல் நம்பரை எடுத்து பொதுமக்களைத் தொடர்பு கொண்டு மோசடி செய்து வருவதாகவும், அதிலும் பெரும்பாலும் பெண்களை குறிவைத்து மட்டுமே இந்த மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த மோசடி கும்பலிடம் கவனமாக இருக்குமாறும், சுங்க வரித்துறை மற்றும் மும்பை போலீசார் என பேசுவதாக கூறினால், உடனடியாக பொதுமக்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நடிகை மும்தாஜ் வீட்டில் சிறுமிகள் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டார்களா?

Last Updated : Jul 24, 2023, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details