தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:50 PM IST

ETV Bharat / state

சென்னையில் வடிகால்கள் சீரமைக்கப்படுவதே வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னையில் அடிக்கடி வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதால், நிரந்தரமாக தீர்வுக் கான வடிகால்கள் சீரமைக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னையில் அடிக்கடி இது போன்று வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதால் நிரந்தரமாக தீர்வுக்கான வடிகால்கள் சீரமைக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெருமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்ட இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து, நடிகர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிறகட்சி தலைவர்கள் என பலரும் முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,"மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ.4000 கோடி செலவிடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புயல், வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது.

தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அது போதுமானது. உயர்த்தி வழங்க வேண்டிய அவசியம் இல்லை. வெள்ள மீட்புப் பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றது. மீட்பு பணிகள் மிக விரைவாக நடைபெற்று உள்ளது.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நேரத்தில், அரசியலைக் குறை சொல்வதற்காகவே சில பேர் இது போன்ற வெள்ளை அறிக்கை வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். ரூ.4000 கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் கட்டப்பட்டதன் காரணமாகத் தான் வெள்ள நீர் பாதிப்புகள் அதிகமாக இல்லை.

எனவே, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. சென்னையில் அடிக்கடி இது போன்ற வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதால், நிரந்தரமாக தீர்வுக் கான வடிகால்கள் சீரமைக்கப்பட வேண்டும்." என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிறைவாசிகள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details