தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2021, 11:07 PM IST

ETV Bharat / state

கோவில் சொத்துக்களுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு - சென்னை உயர் நீதிமன்றம்!

பழநி, பால தண்டாயுதபாணி கோயிலுக்கு இங்கிலாந்து ராணியால் தானமாக வழங்கப்பட்ட நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க குத்தகைதாரர்களுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், கோவில் சொத்துக்களுக்கும்,சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளது.

MHC order
MHC order

சென்னை:குத்தகை நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் திருப்பி வழங்க வேண்டும் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி பால தண்டாயுதபாணி கோயிலுக்கு, கடந்த 1863ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இங்கிலாந்து மகாராணியால், தாராபுரம் தாலுகா, பெரியகுமாரபாளையம் கிராமத்தில் உள்ள 60 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது.

இந்த நிலம் ஸ்ரீரங்க கவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகிய இருவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. பின்னர், 1960ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் திருப்பி எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும் ஈரோடு நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் மீது பழநி பாலதண்டாயுதபாணி கோவில் தேவஸ்தானத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும், ஸ்ரீரங்க கவுண்டர் மற்றும் ராமசாமி கவுண்டர் ஆகியோருக்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், கோயில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமிக்கும், அதன் சிலைகளுக்கும், அதன் சொத்துக்களுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுவாக குழந்தைகளுக்கு நீதிமன்றமே பாதுகாவலர் எனச் சட்டம் உள்ளது. அதுபோல கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியை பக்தர்கள் குழந்தையாகவே பார்க்கின்றனர். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கின்றனர். கோயில் சொத்துக்களுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோயில்களில் பணியாற்றும் தினக்கூலிகளை நிரந்தரமாக்க வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details