தமிழ்நாடு

tamil nadu

கொரோனா வைரஸ்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

By

Published : Mar 8, 2020, 5:25 PM IST

சென்னை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கொரோனா வைரஸ்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் தாக்குதலின் முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், இருமல் வரும்போது கைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேலூரில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

ABOUT THE AUTHOR

...view details