தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுதிகளில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை!

புதிதாக வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள ஒரு சாதாரண விடுதியில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

corona rate increased for hotel employee
corona rate increased for hotel employee

By

Published : Jan 19, 2021, 2:58 PM IST

Updated : Jan 19, 2021, 3:04 PM IST

சென்னை: விடுதிகளில் பணிபுரியும் 141 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையிலுள்ள நட்சத்திர விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளிலும் கரோனா பரிசோதனை செய்து வருகிறது மாநகராட்சி. 15 மண்டலங்களின் விடுதிகளில் உள்ள 13,109 நபர்களில் 10,913 நபர்களுக்கு மாநகராட்சி பரிசோதனை செய்தது. அதில் நட்சத்திர விடுதிகளில் 127 நபர்கள், சாதாரண விடுதிகளில் 14 நபர்கள் என 141 நபர்களுக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 743 நபர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர வேண்டியுள்ளது. இன்று மட்டும் 990 பரிசோதனை செய்யப்பட்டது. புதிதாக வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள ஒரு சாதாரண விடுதியில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 19, 2021, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details