தமிழ்நாடு

tamil nadu

ராகுல் தலைமையில் போராட்டத்திற்குத் தயாராகும் தமிழ்நாடு காங்கிரஸ்

By

Published : Nov 2, 2020, 4:31 PM IST

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தலைமையில் ஏர் கலப்பை ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.

congress mp RahulGandhi participate former protest in tamilnadu
congress mp RahulGandhi participate former protest in tamilnadu

சென்னை:பாஜக தலைமையிலான மத்திய அரசு மூன்று வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக தொடர்ந்து விவசாயிகள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் ஏர் கலப்பை ஊர்வலம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தகவல் தெரிவித்தார்.

கே.எஸ். அழகிரி ட்வீட்

ராகுல்காந்தி பங்கேற்கும் இந்த விவசாயிகள் பேரணி தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் அமையும்.

தமிழ்நாடு முழுவதும் எந்தத் தேதியில் ஏர் கலப்பை ஊர்வலம் தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details