தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 23, 2023, 6:24 PM IST

ETV Bharat / state

நடிகர் விஜய் குறித்து கருத்து கூறிய எம்பி விஜய் வசந்த் குறித்து அவதூறு - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தை ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53வது பிறந்த நாள் விழா நாடெங்கும் உள்ள அக்கட்சியினரால் கடந்த ஜூன் 20ஆம் தேதி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் (Congress MP Vijay Vasanth) இவ்விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்த்திப் பேசிய அவர், 'நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை அவருக்கு முன்னதாகவே இருந்ததாகவும், அதனை இவ்வாறு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விஜயை இணைக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்திருந்தார். மேலும், இதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்' அவர் கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவரின் இந்த கருத்துக்கு அவரை ஆபாசமாக திட்டி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட பாஜகவை சேர்ந்த பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவின் தலைவர் ஹேம்நாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 23) புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரவியம், 'காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் வசந்த், முகநூலில் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என பதிவிட்டிருந்ததாகவும், அதற்கு பாஜகவை சேர்ந்த சுரேஷ் என்பவர் எம்.பி விஜய் வசந்தை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி கருத்து பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். எம்.பி விஜய் வசந்த்தை அவதூறாக பேசிய அந்த நபர் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டுமென' கோரிக்கை வைத்துள்ளார்.

இதேபோல 'எம்.பி விஜய் வசந்த்தை கீழ்த்தரமாக, அவரின் தாயை பற்றி ஆபாசமாக பேசிய பாஜகவை சேர்ந்த சுரேஷ் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. குஷ்பு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறினால் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுசெயலாளர் ராமலிங்க ஜோதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாஜக பிரமுகரின் அடாவடி: சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் சரண்யா(33). இவரது 7 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பால் பேச்சு குறைபாடு உள்ள நிலையில், வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள 'மை பாட்டி வீடு' என்ற தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். கடந்த 7 மாதங்களாக அச்சிறுவன் மழலையர் பள்ளியில் படித்து வரும் நிலையில் சிறுவன் படித்து வரும் பள்ளியில் பணியாற்ற பயிற்சிக்கு வந்த கல்லூரி மாணவர்களால், தான் அங்கு சித்திரவதை செய்யப்படுவதாகவும், கை, கால்கள் கட்டப்படுவதாகவும் பெற்றோரிடம் சிறுவன் தெரிவித்துள்ளார்.

ஆட்டிசம் பாதித்த சிறுவனை துன்புறுத்தியதாக பாஜக பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் சரண்யா உடனே மழலையர் பள்ளி உரிமையாளரும், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி(42) என்பவரிடம் சென்று தனது மகனை துன்புறுத்தியது குறித்து கேட்டுள்ளார். அப்போது மீனாட்சி 'அப்படி தான் செய்வோம்' என்று பதிலளித்ததுடன் சரண்யாவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சரண்யா இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவனை துன்புறுத்தியதுடன், அதனை கேட்க சென்ற தாய் சரண்யாவை பள்ளி உரிமையாளர் மீனாட்சி மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மீனாட்சி மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு விஜய் வசந்த் எம்பி குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜகவை சேர்ந்த சுரேஷ் மீது புகார் அளிக்கப்பட்டதும், பள்ளியில் சித்ரவதை செய்யப்பட்ட தனது மகனுக்காக நியாயம் கேட்க வந்த தாயிடம் தகாத வார்த்தைகளால் பேசிய தனியார் பள்ளியின் உரிமையாளரும், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் மறைவு: காவல் துறை மரியாதை வழங்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details