தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2020, 10:58 PM IST

ETV Bharat / state

ஆழியாறு, வரதமாநதி அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!

சென்னை : பாசனத்திற்காக ஆழியாறு அணையிலிருந்தும், வரதமாநதி அணையிலிருந்தும்  வரும் 6ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம்போக பாசனத்திற்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்துவிடக்‌ கோரிய வேளாண்‌ பெருங்குடி மக்களின்‌ வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின்‌ மூலம்‌ பாசனம்‌ பெறும்‌ நிலங்களின்‌ இரண்டாம்போக பாசனத்திற்கு 6.11.2020 முதல்‌ 15.4.2021 முடிய 160 நாட்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து 1,137 மில்லியன்‌ கன அடிக்கு மிகாமல்‌ தண்ணீர்‌ திறந்துவிட ஆணையிட்டப்பட்டுள்ளது..

இதனால்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ ஆனைமலை வட்டத்தில்‌ உள்ள 6,400 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌. விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெற வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வரதமாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக நவம்பர் 6ஆம் தேதிமுதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 120 நாள்கள் தண்ணீர் திறப்பதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 5,523.18 ஏக்கர் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details