தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷீலா தீட்சித் மறைவு: ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி இரங்கல்!

சென்னை: டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவுக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

mkstalin_ksalagiri

By

Published : Jul 20, 2019, 9:54 PM IST

ஸ்டாலின், திமுக:

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் எனும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர், மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சராக பணியாற்றியவர். மூன்று முறை டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து பதவி வகித்த இவர் நிர்வாகத் திறமை மிகுந்தவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ்:

இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி மாநகர முதலமைச்சருமான ஷீலா தீட்சித், தமது 81 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி கேட்டு துயரமும், வருத்தமும் அடைந்தேன். மறைந்த மத்திய அமைச்சர் உமாசங்கர் தீட்சித் மருமகளான ஷீலா தீட்சித் நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக, ஆளுநராக, தில்லி மாநில முதலமைச்சராக 15 ஆண்டு காலம் தொடர்ந்து பதவி வகித்து சாதனை படைத்தவர். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. மனிதநேயமிக்கவர். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன.

ABOUT THE AUTHOR

...view details