தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2021, 12:58 PM IST

ETV Bharat / state

நாளை விலகுகிறது வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை மையம்!

சென்னை: வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் நாளை விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

vசென்னை
சென்னை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 20-01-2021, 21.01.2021 ஆகிய இரண்டு தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமாரியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது . மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

மேலும் வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details