தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 4.5 கிலோ தங்கம், 17 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்!

By

Published : Mar 19, 2019, 9:14 AM IST

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி ஆலப்புழா விரைவு ரயிலில் கேரள மாநிலம் திருச்சூருக்குக் கடத்த முயன்ற நான்கரை கிலோ தங்க பிஸ்கட்டுகள் சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நான்கு பேரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர்களது இடுப்பில் தங்க பிஸ்கட்டுகள் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

தங்கம் கடத்தல்

அதில் ஒருவரிடம் மட்டும் முறையான ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லிஜோ, சனில், புதுகோடு பகுதியைச் சேர்ந்த பிரகாசன், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சத்யபாலன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் ஒரு நகைக்கடையில் தங்க பிஸ்கட்டுகளை வாங்கிக்கொண்டு கேரளா கொண்டுசென்று அதனை நகைகளாய் மாற்றி விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்றதாக அவர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளை சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் முன்னிலையில் ரயில்வே காவல் துறையினர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தங்கம் கடத்தல்

அதேபோல், சென்னை வால்டாக்ஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் 17 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்களுக்கான எந்த ஆவணங்களும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் 17 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details