சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அருணோதயா சங்கங்களின் கூட்டமைப்பு, நீதிபதி ஏ.கே.ராஜனுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், 'கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வுகளை உற்று நோக்கும்போது, அதன் முதல் 50 பட்டியல் பட்டியலின, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் யாரும் இல்லை என்பதை கவனிக்க முடிகிறது. நீட் தேர்வு முழுக்க முழுக்க வசதியானவர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
தேர்வு முடிவு என்பது மாணவர்களின் அறிவுத்திறனை ஒட்டி இருக்க வேண்டும். மாணவர்களின் வசதி வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கை.