போக்குவரத்துத் துறை:
- 1,580 கோடி மதிப்பீட்டில், 2,213 பிஎஸ் ஸ்டேஜ் ஆறு மாசு கட்டுப்பாட்டு தரம் கொண்ட பேருந்துகள் வாங்க 2020-21 ஆம் ஆண்டில், 960 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து நிதியுதவி பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் பேம் இந்தியா இரண்டு திட்டத்தின் கீழ், 525 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்படும்.
- பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நிர்பயா திட்டத்தின் மூலம் 75.02 கோடி ரூபாய் செலவில் அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.