சென்னை:இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய பிரதிநிதி சிங்காரவேலன், 'கடந்த 10 வருட காலமாக நாங்கள் நடத்திய பல கட்டப் போராட்டங்களுக்கு இதுவரை எந்த தீர்வும் எங்களுக்கு கிடைத்த பாடில்லை. தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருமே நியமனத் தேர்வு எழுதவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடிமான TET தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். ஆனால், 10 ஆண்டுகள் கழித்து நியமனத் தேர்வு எழுதவேண்டும் என்றால், இது எப்படி சாத்தியமாகும். எங்கள் துறை சார்ந்த அமைச்சரும் செயலாளரும், எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முழுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை கடந்த 2012 முதல் இரட்டிப்பு ஆக்கப்படவில்லை. இதனால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகையால், ஆண்டு கல்வி ஊக்கத்தொகையை உயர்த்தி தரவேண்டுமென்றும்; உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தற்போது அறிவித்துள்ள தற்காலிக பணியிடங்களான 1,865 இடங்களைத்தான் அறிவித்துள்ளார்.
அந்தப் பணியிடங்கள் முழுவதும் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமல்லாமல் அவர்களை அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை நேர்காணல் மூலம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.