தமிழ்நாடு

tamil nadu

'தமிழ்நாடு ஆளுநர் செல்லுமிடமெல்லாம் கருப்புக்கொடி காட்டப்படும்' கி.வீரமணி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காவிட்டால், அவர் செல்லுமிடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட நேரிடும் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By

Published : Dec 1, 2022, 2:04 PM IST

Published : Dec 1, 2022, 2:04 PM IST

கி.வீரமணி
கி.வீரமணி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காததை கண்டித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் இன்று (டிச.1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிட கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களோடு மதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளும், மாமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, அவசர சட்டமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் இருப்பதால், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.

இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை கிட்டத்தட்ட 32 நபர்கள் இறந்துள்ளனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இறப்பவர்களுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். அண்ணாமலைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், நேரம் ஒதுக்க தெரிந்த ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்திக்க நேரம் ஒதுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

திராவிட கழகம் சார்பில் போராட்டம் அறிவித்ததற்கு பிறகு தான் ஆளுநர் மாளிகையின் கதவு கொஞ்சம் திறந்திருக்கிறது. திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடக்கூடாது என்பதற்காக ஆளுநர் இப்படி செயல்பட்டு வருகிறார். அவர் ஆளுநராக இல்லாமல் அரசியல்வாதி போல சனாதான கொள்கையை பற்றி பேசி வருகிறார். அவர் இந்த சட்டத்திற்கு நந்தி போல குறுக்கே படுத்து இருக்கிறார் என விமர்சித்தார்.

இது திமுகவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மக்கள் உயிர்களை காப்பாற்றுவதற்காக, அவர் சட்ட மசோதாவில் கையெழுத்திட வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இன்னும் 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், ஆளுநர் ஆர்எஸ்எஸ் காரர்போல பேசுகிறார். தேவை இல்லாமல் திராவிட சித்தாந்தங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு தன் கடமைகளில் இருந்து தவறுகிறார் என கூறினார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் வடிவம் மாறும். ஆளுநர் செல்லுமிடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு அமைதியாக இருக்கும் சூழலில் அமலியை ஏற்படுத்த நினைக்கிறார்கள், நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம் எனவும் எங்களது போராட்டம் அடுத்த கட்டமாக தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் ரகசிய யாகம்: பழனியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details