தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை!

சென்னை: பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ராணுவத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

By

Published : Aug 27, 2019, 11:50 AM IST

Updated : Aug 27, 2019, 1:22 PM IST

shot-dead-in-chennai

சென்னை பல்லாவரம் ராணுவக்குடியிருப்பில் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி பிரவீன் குமார் ஜோஷிக்கும் அவரின் கீழ் பணியாற்றிய ராணுவ வீரர் ஜக்சீர் சிங் என்பவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் பிரவீன் குமார் தூங்கிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த ஜக்சீர் சிங் அவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ராணுவத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

பின்னர் ராணுவ வீரர் ஜக்சீர் சிங் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 27, 2019, 1:22 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details