சென்னை புறநகர் பகுதிகளில் இன்று (நவ. 27) காலை 6:30 மணியிலிருந்து கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
இன்று காலை 6:30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், மஸ்கட்டில் இருந்து 284 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. மேலும் இது போயிங் ரக பெரிய விமானம் என்பதால், சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.