தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2021, 7:19 PM IST

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 633 கிராம் தங்கம் பறிமுதல்

சார்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த 31 லட்சம் ரூபாய் மதிப்புடைய 633 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold seized at Chennai airport
gold seized at Chennai airport

சென்னை : சார்ஜாவிலிருந்து சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று(ஜுலை.03) காலை வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது தஞ்சாவூரை சோ்ந்த அகிலன்(27) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று பிளாஸ்டிக் குப்பிகளை எடுத்தனர்.அதை திறந்து பாா்த்தபோது, அதில் இருந்த 633 கிராம் தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்தனா்.அதன் சர்வதேச மதிப்பு 31 லட்சம் ரூபாய்.

இதையடுத்து கடத்தல் பயணி அகிலனை கைது செய்து விசாரணை நடத்தினா். அப்போது அகிலன் ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது வியாஸ்(23) என்பவரிடம் கொடுக்கதான் இந்த தங்கத்தை கடத்தி வந்தேன்.

அவருடைய நண்பா் ஒருவா் தான் சாா்ஜாவில் இந்த தங்கத்தை என்னிடம் தந்து அனுப்பினாா்.இதை முகமது வியாஸ் சென்னையில் என்னிடம் வாங்கிக்கொண்டு ரூ.10 ஆயிரம் தருவதாக கூறினார். முகமது வியாஸ் தற்போது என்னை அழைத்து செல்ல விமானநிலையம் வந்துள்ளாா் என்று கூறினாா்.

இதையடுத்து சுங்கத்துறையினா் அகிலனை மட்டும் தனியே வெளியே அனுப்பி ரகசியமாக கண்காணித்தனர். அகிலன் வெளியே வந்ததும்,கார் பாா்க்கிங் பகுதியில் நின்ற முகமது வியாஸ் வந்து அகிலனை வரவேற்றார்.

இதையடுத்து மறைந்திருந்த சுங்கத்துறையினா் முகமது வியாஸை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து இருவரிடமும் சுங்கத்துறையினா் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details