தமிழ்நாடு

tamil nadu

5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவு: முதலமைச்சர் இரங்கல்!

By

Published : Aug 16, 2020, 2:24 PM IST

சென்னை: உடல் நலக் குறைவால் காலமான மருத்துவர் திருவேங்கடத்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 5 rupees doctor Thiruvenkadam death: Chief Minister edapadi palanisamy condolences
5 rupees doctor Thiruvenkadam death: Chief Minister edapadi palanisamy condolences

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'ஐந்து ரூபாய் மருத்துவர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட மருத்துவர் திருவேங்கடம் நேற்று (ஆகஸ்ட் 15) உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து, நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற மருத்துவர் திருவேங்கடம் இலவசமாக மருத்துவம் படித்ததாகவும், அதே போன்று தனது சேவையும் அவ்வாறு இருக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவச் சேவை அளித்திட வேண்டுமென்ற உயரிய நோக்கில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு சிகிச்சை அளித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஐந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு, தனது இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர்.

தன்னுடைய சிறு வயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும், மருத்துவராகி ஏழை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்து மருத்துவரான திருவேங்கடம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கியுள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையைப் பல ஆண்டுகளாகப் பெற்று வந்த வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்' என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details