தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு முதன்முறையாக இன்று (ஜூன்.17) காலை டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து, 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில்,
”நீர்வளத்துறை
மேகதாது அனுமதியினை ரத்து செய்ய வேண்டும்.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.
கோதாவரி-காவேரி நதிநீர் இணைப்பு, காவேரி- குண்டாறு இணைப்புத்திட்டம்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவேரி நதிநீரை தமிழ்நாட்டிற்காக ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
மீன்வளத்துறை
மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும்.
தேசிய அளவில் மீனவர்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும்.
மின்சாரம்
நிலக்கரி விநியோகத்தில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும்.
மின்சார திருத்த சட்டம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும்.
நிதி
மாநிலங்களுக்கான உரிய நிதி பங்கீட்டை அளிக்க வேண்டும். (15ஆவது நிதிக்குழு அறிக்கையின் படி)
14ஆவது நிதிக்குழு பரிந்துரையின் படி உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.
நிலுவையில் 1996-1997 முதல் உள்ள 2014-15 வரையிலான ஒன்றிய அரசின் வரியில் மாநிலத்தின் பங்கை அளிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
மருத்துவம்
நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கொண்டு வர வேண்டும்.
கோவையில் எய்ம்ஸ் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பூசி ஒதுக்க வேண்டும்
கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தை ஒதுக்க வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.
விவசாயம்
விவசாய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
பஜால் பீமா யோஜனா நிதி ஒதுக்க வேண்டும்.
உணவு
தமிழ்நாட்டிற்கு தேவையான அரிசியை ஒதுக்க வேண்டும்.
தொழில்
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் திறக்க அனுமதிக்க வேண்டும்.
மெகா ஜவுளி பூங்கா கொண்டு வர வேண்டும்.
சேலம் இரும்பு ஆலை இடத்தை ராணுவப் பூங்கா அமைக்க ஒதுக்க வேண்டும்.
பள்ளிகல்வி
புதிய கல்விக் கொள்கை திரும்ப பெற வேண்டும்.
கட்டாயக் கல்வி பெறும் சட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும்
சிறுகுறு தொழில்
சிறு குறு நிறுவனங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ