தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் சுமார் 22 ஆயிரம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை

சென்னை: ஒரே நாளில் 22 ஆயிரத்து 693 பேர் மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

By

Published : Aug 2, 2020, 2:13 AM IST

corona medical camp
கரோனா பரிசோதனை முகாம்

கரோனா பரவலைத் தடுப்பதற்கு சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தினமும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி, 510 மருத்துவ முகாம்கள் இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றன. இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 60, அண்ணா நகரில் 55 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

இவற்றின் மூலம் 22 ஆயிரத்து 693 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஆயிரத்து 829 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாள்தோறும் நடைபெறும் மருத்துவ முகாமை அமைச்சர்கள், சுகாதாரத் துறைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் மே மாதம் முதல் இன்று வரை மொத்தம் 26 ஆயிரத்து 237 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் 15 லட்சத்து 24 ஆயிரத்து 505 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 5,879 பேருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details