சென்னை: குடியரசு தினத்தையொட்டி அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் சுமார் 1 லட்சம் காவல் துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட போவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சென்னையை பொருத்தவரை 6 ஆயிரத்தை 800 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும், தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 5 அடுக்கு காவல் துறையினர் உட்பட 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் முக்கிய இடங்களான விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மூன்றடுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.