தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2021, 9:46 AM IST

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை

செங்கல்பட்டு: முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth hacked to death in Chengalpattu
முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில், கொள்ளி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (24). இவர் நேற்று, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தப்போது, அடையாளம் தெரியாத நபர்கள், அஜீத்குமாரை விரட்டி கத்தியால் தாக்கினர்.

இதில் அஜீத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மறைமலை நகர் காவல்துறையினர் அஜீத்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் கொலை தொடர்பான முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கறி பரத் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜம்தாரா சைபர் க்ரைம் திருடர்கள்!

ABOUT THE AUTHOR

...view details