தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 12, 2020, 5:30 PM IST

ETV Bharat / state

ஈ.சி.ஆர்., சாலையில் விபத்து - பெண் மருத்துவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

செங்கல்பட்டு: கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் 29 வயதான பெண் மருத்துவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்து - பெண்  மருத்துவர் பலி, இருவர் படுகாயம்
கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்து - பெண் மருத்துவர் பலி, இருவர் படுகாயம்

சென்னை புழல் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் ரேகா தனது நண்பர்களுடன் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஓதியூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பனை மரத்தில் மோதியது.

இதில் ஓட்டுநர் உள்பட மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவர் ரேகா காரிலேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

உடன் இருந்த இருவர் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செய்யூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'நீட் என்பது தேர்வுமல்ல, தற்கொலை என்பது தீர்வுமல்ல' - கவிஞர் வைரமுத்து

ABOUT THE AUTHOR

...view details