கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் நகருக்கு வந்தால் போதும் என்று காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
இருப்பினும் இதனை மீறி ஒரு சிலர் வெளியே சுற்றி திரிகின்றனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தேரடி அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை செருப்பில்லாமல் வெறும் காலில் சாலையில் நிற்க வைத்து நூதன தண்டனை வழங்கினர்.