தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இறந்து மிதக்கும் மீன்களால் நோய் ஏற்படும் அபாயம்"

அரியலூர்: திருக்குளம் ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இறந்து மிதக்கும் மீன்கள்

By

Published : Jul 17, 2019, 10:57 AM IST

அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது திருக்குளம் ஏரி. இதன் அருகே உள்ள வீடுகள், கடைகளின் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதால் மாசடைந்து காணப்படுகிறது.

சில நாட்களாக இந்த ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் இறந்து கரையோரத்தில் மிதக்கின்றன. இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுவதால், சாலைகளில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்து மிதக்கும் மீன்கள்

ABOUT THE AUTHOR

...view details