தமிழ்நாடு

tamil nadu

ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய வீரர்கள்

By

Published : Jul 25, 2021, 3:08 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கின் துடுப்புப் படகு பிரிவின் அரையிறுதி போட்டிக்கு அர்ஜூன் லால் , அரவிந்த் சிங் ஜோடி தகுதி பெற்றுள்ளனர்.

Tokyo Olympics
ஒலிம்பிக் துடுப்புப்படகு போட்டி

டோக்கியோ ஒலிம்பிக்கின் துடுப்புப் படகு பிரிவின் ஆடவர் இரட்டையர் சுற்றுக்கான போட்டி இன்று (ஜூலை.25) காலை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய இணை அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் பந்தய தூரத்தை 6 மணி 51 நிமிடம் 36 விநாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.

போலந்து நாட்டை சேர்ந்த ஜெர்சி கோவல்ஸ்கி, ஆர்தூர் மிகோலாஜ்செவ்ஸ்கி ஆகியோர் பந்தய தூரத்தை 6 மணி 43 நிமிடம் 44 விநாடிகளில் கடந்து தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தனர்.

அர்ஜூன் லால், அரவிந்த் சிங் ஜோடி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளதால், பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இதையும் படிங்க:Tokyo Olympics : தமிழ்நாடு வீரர் சத்தியன் ஞானசேகரன் தோல்வி

ABOUT THE AUTHOR

...view details