டோக்கியோ ஒலிம்பிக்கின் துடுப்புப் படகு பிரிவின் ஆடவர் இரட்டையர் சுற்றுக்கான போட்டி இன்று (ஜூலை.25) காலை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய இணை அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் பந்தய தூரத்தை 6 மணி 51 நிமிடம் 36 விநாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.
போலந்து நாட்டை சேர்ந்த ஜெர்சி கோவல்ஸ்கி, ஆர்தூர் மிகோலாஜ்செவ்ஸ்கி ஆகியோர் பந்தய தூரத்தை 6 மணி 43 நிமிடம் 44 விநாடிகளில் கடந்து தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தனர்.