தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 28, 2021, 7:44 AM IST

ETV Bharat / sports

TOKYO PARALYMPICS: இறுதிப்போட்டிக்கு பவினாபென் படேல் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், சீன வீராங்கனையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

Bhavina Patel
பவினா பென் படேல்

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.

இதில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், சீன வீராங்கனை ஜாங்க் மியாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 3-2 என்ற செட்கணக்கில் சீன வீராங்கனையை பவினாபென் படேல் வீழ்த்தினார்.

இதையடுத்து, அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:PARALYMPICS COMPOUND ARCHERY: மூன்றாமிடத்தில் ராகேஷ் குமார்!

ABOUT THE AUTHOR

...view details