உலகின் கலப்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் குத்துச்சண்டை விளையாட்டு போட்டியில் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மெக்ரிகோர். 31 வயதாகும் அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மீண்டும் கலப்பு மார்ஷியல் ஆர்ட்ஸ்லிருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திரம்!
கலப்பு மார்ஷியல் ஆர்ட்ஸ்(எம்.எம்.ஏ) குத்துச்சண்டை விளையாட்டிலிருந்து அயர்லாந்தின் நட்சத்திர வீரர் மெக்ரிகோர் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'நான் இவ்விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளேன். இதுநாள் வரை எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். மேலும் லாஸ் வேகாஸில் நான் எனது பட்டம் வென்ற புகைப்படங்களை விற்க முடிவு செய்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் அதனை வாங்கி உங்கள் வீடுகளில் மாட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் எதை விரும்பினாலும் அது உங்களுடையது' என்று கூறியுள்ளார்.
அவர் ஓய்வு பெறுவது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த வருடம் மார்ச் மாதம் எம்எம்ஏவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பு காரணமாக அவர் மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.