தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2020, 10:35 AM IST

ETV Bharat / sports

விளையாட்டுப் பயிற்சிக்கு அனுமதி

சென்னை: தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்கள் தங்களின் பயிற்சியை தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

practice
practice

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், “தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டு வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம்.

வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக விளையாட்டு வளாகங்களில், மைதானங்கள் திறக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதிற்குட்பட்டவர்கள் தவிர, வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசிடம் கோரியுள்ளது.

இதனையடுத்து, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதிற்குட்பட்டவர்களைத் தவிர்த்து, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டு வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த சீசனுக்கான பிரீமியர் லீக் போட்டிகள் செப்.12 முதல் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details