தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டிச. 18ஆம் தேதியன்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தேர்தல்!

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தேர்தல், வரும் டிச. 18ஆம் தேதி நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Nov 28, 2020, 3:01 PM IST

boxing-federation-of-india-to-hold-elections-on-december-18
boxing-federation-of-india-to-hold-elections-on-december-18

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருந்தது. அப்போது கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால், மூன்று மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது டிச. 18ஆம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜே கவுலி கூறுகையில், ''குருகிராமில் நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தல் பற்றி பேசினோம். அப்போதே தேர்தலுக்கான அறிவிப்பும் வழங்கப்பட்டது.

சரியாக செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். டிச. 2ஆம் தேதிமுதல் வேட்புமனு தாக்கல்செய்யலாம். அன்றைய தினமே தேர்தல் நடக்கும் இடம் பற்றி உறுதிசெய்யப்படும்'' என்றார்.

ஸ்பைஸ்ஜெட் விமான நிலையத்தின் உரிமையாளர் அஜய் சிங்தான் இப்போது இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இவர் இம்முறையும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இவருக்கு எதிராக மகாராஷ்டிரா பாஜக தலைவர் ஆஷிஷ் ஷீலார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர். எதுவாகினும் வேட்புமனு தாக்கல்செய்யப்பட்ட பின்னரே, யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது தெரியவரும்.

இதையும் படிங்க:அதானி நிறுவனத்திற்கு எதிராக சிட்னி மைதானத்தில் களமிறங்கிய போராட்டக்காரர்கள்...!

ABOUT THE AUTHOR

...view details