தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 20, 2019, 4:08 AM IST

ETV Bharat / sports

ஐஎஸ்எல் கால்பந்து: ஜாம்ஷெத்பூரை காலி செய்த மும்பை!

ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் மும்பை சிட்டி எஃப்.சி அணி ஜாம்ஷெத்பூர் எஃப்.சி அணியை வீழ்த்தியது.

isl
isl

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை சிட்டி எஃப்.சி அணி - ஜாம்ஷெத்பூர் எஃப்.சி ஆகிய அணிகள் மோதின.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெத்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. போட்டியில் 15ஆவது நிமிடத்திலேயே மும்பை வீரர் பாவ்லோ கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து 37ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெத்பூர் வீரர் ஜோஸ் லூயிஸ் அர்ரோயோ ஒரு கோல் அடித்து தனது அணியை சமநிலை பெறவைத்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் சமனில் நிறைவடைந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் மும்பை அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்காததால் இறுதியில் மும்பை சிட்டி எஃப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இப்போட்டிக்குப்பின் ஜாம்ஷெத்பூர் அணி நான்காவது இடத்திலும், மும்பை அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம்: இந்தாண்டும் கோடிகளில் புரளும் தமிழ்நாடு வீரர்

ABOUT THE AUTHOR

...view details