வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 32 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே, ராஜஸ்தான் வீரர் கிருஷ்ணப்ப கவுதம் வீசிய 9ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளை பறக்க விட்டு பேட்டிங்கில் செட் ஆன அவர், அடுத்த பந்தில் சிக்சர் அடிக்க இறங்கி வந்தார். இதை சுகாரித்துக் கொண்ட கிருஷ்ணப்ப கவுதம் பந்தை லெக் சைடில் ஓயிடாக வீசினார்.
ரோஹித் ஷர்மாவின் கிரேட் எஸ்கேப் ஆனால், தான் ஆட்டமிழக்காமல் இருப்பதற்காக ரோஹித் ஷர்மா தனது இடது காலால் பந்தை வேண்டுமென்றே தட்டிவிட்டார். பந்து ஸ்கொயர் லெக் திசையில் சென்றது. இருப்பினும், ரோஹித் ஷர்மா காலால் பந்தை தட்டியதால் ரன் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.